லக்னோ பெண்கள் மற்றும் சிறுமி களுக்கு பாதுகாப்பு இல்லா மாநிலமாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் உள்ள நிலையில், பரூக்காபாத்தில் மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ளது
கடந்த வாரம் பரூக்காபாத் அருகே காயங்கஞ்ச் பகுதியில் கோவிலுக்குச் சென்ற 2 தலித் சிறுமி களை ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்த குண்டர்கள் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்ட னர். 2 தலித் சிறுமிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளி யாகியுள்ளது.
இந்நிலையில், பரூக்காபாத் கோட்வாலி அருகே 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோட்வாலி அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமியை,அதே பள்ளியில் உதவியாளராக பணி யாற்றும் பங்கஜ் மற்றும் அமித் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமி கருவுற்ற பின்பு கண்டுபிடிப்பு
13 வயது சிறுமி 5 மாதத்திற்கு முன்பே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கருவுற்ற பின்பே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள் ளது. 5 மாதத்திற்கு முன்பு சிறுமி இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள் ளார். அப்பொழுது பங்கஜ் மற்றும் அமித் ஆகியோர் சிறுமியை கடத்தி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, இதை பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் சிறுமி பெற்றோர்களிடம் சொல்லா மல் இருந்துள்ளார்.
இந்நிலையில், கருவுற்றதால், சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதுதொடர்பாக பெற்றோர்கள் கோட்வாலி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பங்கஜ் மற்றும் அமித் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களை கைது செய்த தாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதியும்... உ.பி., பாஜக அரசும்...
குற்ற வகைகளுக்கு ஏற்ப சாதி பெயர்களின் குறிப்பீடு
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குற்ற சம்பவங்களுக்கு ஏற்ப சாதி பெயர்கள் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதாவது முஸ்லிம், தலித், கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களையும், கொலைக் குற்றங்களில் ஈடுபடும் பசுக்குண்டர்களையும் கைது மற்றும் எப்ஐஆர் பதிவு செய்யும் பொழுது குற்றவாளிகளின் பெயர்களை விக்னேஷ் யாதவ், பங்கஜ் ஜாதவ், அனில் தாக்கூர், அஜித் படேல் என சாதி பெயர்களோடு போலீசார் அறிவிப்பார்கள். ஆனால் பாலியல் குற்றங்களை செய்யும் உயர்சாதி நபர்களை வெறும் பெயரை மட்டுமே குறிப்பிடுவார்கள். பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை குறிப்பிடுவதில்லை. இது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத் மாநிலங்களிலும் நடைமுறையிலும் உள்ளது.